பன்மை வெளியீடுகள்

வெளியீடு: 01

ஏ.ஜி.கே எனும் போராளி   (தொகுப்பு) மு. சிவகுருநாதன்

முதல் பதிப்பு: நவம்பர் 2020

பக்கங்கள்: 296     விலை: ₹ 290

    கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.

சுகுணா திவாகர்  (ஆனந்த விகடன் , ஜன.13, 2021)

      தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்சியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வாய்ப்பை எப்படி வெற்றிகொள்வது என்பதற்கு ஏ.ஜி.கே. ஒரு முன்னுதாரணம்.

– செல்வ புவியரசன் (இந்து தமிழ் திசை – நூல்வெளி, ஜன.16, 2021)

     ஏஜிகேயின் தீவிரப் போக்கு ஏற்புடையதா இல்லையா என்ற கேள்வியைக் காட்டிலும், பாசிசம் பெருகிவரும் நடப்புக் காலத்தில் இப்படியொரு புரட்சியாளர் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் பிறப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை அதுதான் ஏஜிகேவின் ஆளுமையோ!

– எழுத்தாளர் நக்கீரன் http://www.writernakkeeran.com

வெளியீடு: 02

கல்வி  அபத்தங்கள் – மு.சிவகுருநாதன்

(தமிழக அரசின் புதிய பாடநூல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள்)

முதல் பதிப்பு: பிப்ரவரி 2021

பக்கங்கள்: 600     விலை: ₹ 580

        கடந்த மூன்றாண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அணுகல்முறைகளை, இந்த மூன்றாண்டு காலத்திய அவர்களின் பாட நூல்களின் ஊடாகப் புரிந்து கொள்ள சிவகுருநாதனின் இந்நூல் நமக்குப் பெரிய அளவில் உதவும்.

– பேரா. அ.மார்க்ஸ்

  சிவகுருநாதனின் ஆழ்ந்த வாசிப்பும், நேசிப்பும், கல்விப் புலத்தின் மீதான ஆழ் கரிசனமும் கல்வி அபத்தங்களை ஆசிரியர்களுக்கான ஓர் கையேடாக மாற்றித் தருகிறது. அபத்தங்களுக்கு அப்பால் சென்று தெளிவான விளக்கங்களை, வழிகாட்டுதலைப் பெற்றுத் தருகிறது.

– இரா.மோகன்ராஜன்

வெளியீடு: 03

கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும் (கட்டுரைகள்) – இரா.மோகன்ராஜன் 

முதல் பதிப்பு: மார்ச் 2021

பக்கங்கள்:  176     விலை: ₹ 170

        கத்தை கத்தையாக கவிதைகளை தனது நோட்டுப் புத்தகங்களிலே எழுதி வைத்திருப்பவர். காவிரி, மீத்தேன், சாதி அரசியல், நீட் தேர்வுகள், இக்கால கல்விச்சூழல்கள், பண்பாடு என எந்த ஒன்றைக் குறித்தும் மோகனுடன் விரிவாக உங்களால் உரையாடல் நடத்த முடியும். இச்சமூகத்தின் மீதான அக்கறையும், தான் சார்ந்த மண்ணின் மீதான பாசமும் எப்போதும் அவரது சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது. 

– செ. சண்முகசுந்தரம்

வெளியீடு: 04

எழுதுகோலைக் கொல்லும் அரசியல்  (கட்டுரைகள்)

ஆசிரியர் : இரா.மோகன்ராஜன் 

முதல் பதிப்பு: மார்ச் 2021

பக்கங்கள்:  176     விலை: ₹ 170

        இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்துக் கட்டுரைகளையும் வாசித்து முடித்தபோது, மோகன்ராஜன்  ஓர்  சமரசமற்ற எழுத்துப்போராளி என்பது நமக்குப் புரிகிறது. “அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்”, என்று எட்வர்ட் சையித் சொல்வதுபோல, விளிம்புநிலை மக்கள், உழவர்கள், தொழிலாளிகள், சிறுகுறு தொழில் முனைவோர், மாணவர்கள், மகளிர், சமூகச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகளுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் வன்முறையையும்,  மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் நாசகாரச் சக்திகளுக்கு எதிராகவும், தனது எழுதுகோலைத் துணிச்சலுடனும், நேர்மையுடனும், சமரசமின்றியும் பயன்படுத்தியிருப்பது, பாராட்டுக்குரியது. 

பேரா. சு. இராமசுப்பிரமணியன் 

       நேரடியாக நூல்களைச் சலுகை விலையில் பெறத் தொடர்பு கொள்ளவும்.

பன்மை,

நிலா வீடு, 

2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், 

தியானபுரம் – விளமல்,

மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல்,

திருவாரூர் – 610004.

அலைபேசி:    9842402010 (G Pay)     9842802010 (Whatsapp)

மின்னஞ்சல்:    panmai2010@gmail.com   |   panmai@live.com

இணையம்: www.panmai.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *