110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!
மு.சிவகுருநாதன்

விளமல் கல் பாலம் என்றழைக்கப்படும் விளமல் இயக்கு அணை (ரெகுலேட்டர்) திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் அமைந்துள்ளது.

இது 110 ஆண்டு பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சியில் 1912 இல் கட்டப்பட்டது. இன்று நாங்கள் மூவரும் (கவி, கயல்) இந்த இயக்கு அணையைப் பார்வையிட்டோம்.

100 வயதை நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய
விளமல் கல் பாலம்
கட்டப்பட்ட ஆண்டு :1912
100 வது ஆண்டு:2012
ஆறு :ஓடம்போக்கி ஆறு
அரசுத்துறையெங்கும் ஊழல் நாறிக்கிடக்கிறது. அரசால் காட்டப்படும் பள்ளிகள், சிறு பாலங்கள் ஆகியவை 10 ஆண்டுகளைக் கூட தமது ஆயுளாகக் கொள்ளாதவை. சாலைகள் போட்ட சில மாதங்களில் மரித்துப்போகின்றன.
ஆங்கிலேயர்களால் ( டல்ஹௌசி பிரபு ) 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பொதுப்பணித்துறையால் 1912 இல் கட்டப்பட்ட ரெகுலேட்டருடன் கூடிய விளமல் கல் பாலம் விரைவில் தனது 100 வயதை நெருங்குகிறது.

அவ்வப்போது இப்பாலம் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டாலும் நீரை தேக்கிவைக்கும் மதகுகள் ரெகுலேட்டருடன் அமைக்கப்பட்டதோடு மேற்புறத்தில் சாலைப் போக்குவரத்திற்கும் இந்தப் பாலம் தொடர்ந்து பயன்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் மற்றொரு பாலம் கட்டப்பட்டவுடன் இதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இப்போது இதன் ரெகுலேட்டர் நல்லமுறையில் இயங்கி வருகிறது.
இன்றைய நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைகளைப் பார்க்கும்போது எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்த அந்நியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து இம்மாதிரியான பணிகளை செய்து முடித்துள்ளனர். இவர்கள் ஆற்றிய பணிகள் சிலவற்றை கூட நம் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள் செய்யாதது வேதனைக்குரிய விஷயமாகும்.
28/06/2011
சில படங்கள்…